தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

Unknown
0


தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியான காலத்தில் தொடங்கியது.  பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும்.

இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–

தென்மேற்கு பருவமழை காலம் இன்றுடன் (நேற்று) நிறைவடைந்தது. வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கி இருக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது.

அனேகமாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் (இன்று அல்லது நாளை) தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

வானிலையை துல்லியமாக கணித்து சொல்லிவிட முடியாது. நாளை (இன்று) கூட வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வருகிற 27–ந் தேதி (நாளை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். அதேபோல், 28–ந் தேதி ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

காலை 8.30 மணியுடன் (நேற்று) முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஸ்ரீவைகுண்டத்தில் 5 செ.மீ., சேரன்மகாதேவியில் 4 செ.மீ., அரண்மனைபுதூரில் 3 செ.மீ., சாத்தூர், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, உத்திரமேரூரில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் ஆண்டு மழைபொழிவில் 48 சதவீதம் மழையை தமிழகம் பெறுகிறது. அதாவது, இந்த காலத்தில் தமிழகம் 44 செ.மீ. மழை பெறுகிறது.

தமிழகத்தில் கடந்த 2015–ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இயல்பான அளவை விட அந்த ஆண்டு 53 சதவீதம் அதிகமாக மழை பெய்தது.

ஆனால் 2016–ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் இல்லை. இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது. இதனால் தமிழகம் அந்த ஆண்டு ஏமாற்றத்தை சந்தித்தது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top