![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbNfMr33i67B5t9bDWCPRnxjqP0Qd8lmTahVR4ze167iOjsamNyMN0WJxeEwXIGhRLSM144akaYNXRK5nY6Q_TnrWydQfiQ8XDkR9sKxLqPXnkkENVaZjaqGayNYUFWNgqCmtL1jVxmT4/s1600-rw/Pvitown_2017-10-26-08-07-27-2.png)
ஐடிஎஃப்சி பாரத் நிறுவனம் மற்றும் தஞ்சாவூர் கே.ஜி.பல்நோக்கு மருத்துவமனை- ஆராய்ச்சி மையம் சார்பில்தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் சேதுசாலை அலுவலகத்தில் பொது மருத்துவ முகாமை செவ்வாயன்று நடைபெற்றது. ஐடிஎஃப்சி பாரத் நிறுவன மண்டல மேலாளர் கே.கலையரசன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.கிளை மேலாளர் கே.முத்துக்குமார் வரவேற்றார். கே.ஜி. மருத்துவமனை டாக்டர் வீரையன் தலைமையிலான குழுவினர் பொதுமக்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இம்முகாமில் 288 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். 22 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.