![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEheUQ3cAHqyOdcaYs5k1L1oouRbIZ0XIw-A4yJqWnTIp_WLJ-FwZgZ3o_Yi0LSb1OKFWNTnvOZHb-xQOtO5xkKmbltb7RYj4r6XIEXZPaJTmdphbUK9km74jBbryDfh4qww3AjLghs1_vA/s1600-rw/Pvitown-2017-12-15-08-20-35-848.png)
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதியான ஆவணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு காவிரி மெயின் வாய்க்கால், கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி டிசம்பர் 16 சனிக்கிழமை அன்று பேராவூரணியை அடுத்த ஆவணம் கடைவீதியில் சாலை மறியல் நடத்தப்போவதாக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அடங்கிய போராட்டக்குழு அறிவித்துள்ளது.காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற வலியுறுத்தி ஆவணம் கடைவீதியில் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் மறியல் நடைபெற உள்ளது.