பேராவூரணியில் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு.

Unknown
0 minute read
0
பேராவூரணியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு அகமுடையார் கல்வி மற்றும் கருணை அறக்கட்டளை சார்பில்,  பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் கே. அடைக்கலம் தலைமை வகித்தார். கல்வியாளர்கள் வழக்குரைஞர் வி.ஏ.டி.சாமியப்பன்,  டாக்டர் ஜி.ஆர்.ஸ்ரீதர்,  வீ.ராமநாதன், தலைமையாசிரியர் எம்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்காணிப்பாளர் கவிஞர் அ.உலகநாதன், அதிக  மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு  பரிசு வழங்கி,  "விதை ஒன்று விருட்சமாகிறது'  என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார். பொருளாளர் அ.மெய்ஞானமூர்த்தி வரவேற்றார். செயலாளர் எஸ்.நாகராஜன் நன்றி கூறினார்.
விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top