மேடும், பள்ளமுமாக உள்ள இந்தச் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. மணல் கொட்டிக் கிடப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி மண் கிளம்புகிறது. இதனால் அருகில் குடியிருப்போர், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை காலைசாலையைச் சீரமைக்கும் பணி தொடங்கியது. சம்பந்தப்பட்ட துறை பொறியாளர்கள் மேற்பார்வையில் தார் ஊற்றி சாலையைச் சீரமைத்து வருகின்றனர்.

நன்றி:தீக்கதிர்