![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-nGflOy5j7V2_wtS_BxzuWWnLNli9cRA8teywQrcs-bd0gK9OEMWKRi23ki50_g4ew-sTGQcYwUW3GhO19CJu98GVIlqPqEEDkkxuFKjWyhpqCHQn-3_9Sh220c1_pTp3cnYpQLnzDIo/s1600-rw/Pvitown_0402201807591211121.jpg)
பேராவூரணி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
பிப்ரவரி 21, 2018
0
பேராவூரணி காவல்நிலையம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாயன்று நடைபெற்றது.நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் அருகே, காவல்துறை ஆய்வாளர் ஜனார்த்தனன் முன்னிலையில், பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார். இதில் துணை வட்டாட்சியர் யுவராஜ், காவல்துறை தனிப்படை ஏட்டு ஆதிமூலம், காவலர் மதுசூதனன், அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் நா.பழனிவேலு, பேரா.முத்துக்கிருஷ்ணன், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் இராமநாதன், பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கே.நீலா, ஏ.கோகிலம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 500 பேர் கலந்து கொண்டு, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-nGflOy5j7V2_wtS_BxzuWWnLNli9cRA8teywQrcs-bd0gK9OEMWKRi23ki50_g4ew-sTGQcYwUW3GhO19CJu98GVIlqPqEEDkkxuFKjWyhpqCHQn-3_9Sh220c1_pTp3cnYpQLnzDIo/s1600-rw/Pvitown_0402201807591211121.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-nGflOy5j7V2_wtS_BxzuWWnLNli9cRA8teywQrcs-bd0gK9OEMWKRi23ki50_g4ew-sTGQcYwUW3GhO19CJu98GVIlqPqEEDkkxuFKjWyhpqCHQn-3_9Sh220c1_pTp3cnYpQLnzDIo/s1600-rw/Pvitown_0402201807591211121.jpg)
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க