தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம், சித்துக்காடு உள்ளிட்ட பகுதி மக்கள், டாஸ்மாக் கடை திறக்கக் கூடாதென வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருச்சிற்றம்பலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமார், கலால் வட்டாட்சியர் கோபி ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 10 நாள் வரை கடையை திறப்பதில்லை. அதற்குள் இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் செய்யலாம் என கூறப்பட்டதை தொடர்ந்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நன்றி :தீக்கதிர்