பேராவூரணி - சேதுபாவாசத்திரம் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக மனு கொடுக்கும் இயக்கம்.

IT TEAM
0

 


தஞ்சாவூர், டிச.7 - 

கார்ப்பரேட்களுக்கு ஆதரவான, விவசாயிகள் பொதுமக்களை பாதிக்கக்கூடிய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது. அவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் வே. ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் 

கோ.நீலமேகம் கலந்து கொண்டு பேசினார். திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், திராவிட விடுதலைக் கழக ஒன்றிய செயலாளர் மருத உதயகுமார், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.வி. குமாரசாமி, சி.ஆர்.சிதம்பரம், பி.கோவிந்தராசு, எஸ்.ஜகுபர் அலி, எஸ்.பாஸ்கர், பி.உலகநாதன், எஸ்.ஜாக்குலின் மேரி மூத்த தோழர் பூவாணம் மாணிக்கம் மற்றும் நகரக் குழு ரவி, கிளைச் செயலாளர்கள், வேத. கரம்சந்த் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top