பேராவூரணி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி

IT TEAM
0

 


பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில், வீரியகோட்டை அரிமா கோ. ப.கண்ணன் அவர்களின் தந்தை பொன்.பழனிவேல் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக லயன்ஸ் மாவட்ட தலைவர் ஜாய் செந்தில், பேராவூரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, செயலாளர் ஜீவி.நடராஜன், பொருளாளர் சிவானந்தம் மற்றும் நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் செய்து இருந்தனர்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top