பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு பிரிண்டர் இயந்திரம் வழங்கல்.

IT TEAM
0


விபத்தில் கையை இழந்த மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில், பிரிண்டர் இயந்திரம், தம்ப் பிரிண்ட் இயந்திரம், லேமினேஷன் இயந்திரம் ஆகியவை வழங்கப்பட்டது. பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து, பேரை துளிர் நண்பர்கள் பெயரில் சமூக சேவைகளில் ஈடு அறக்கட்டளை என்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு பகுதியைச் சேர்ந்த பூபதி (வயது 28) எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணியிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில் வலது கை பறிபோனது. இதையடுத்து அவரால் வேலை செய்ய முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், தனது வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து அறக்கட்டளை சார்பில், பூபதி கணினி மையம் அமைக்கத் தேவையான, பிரிண்டர் இயந்திரம், தம்ப் பிரிண்ட் இயந்திரம், லேமினேஷன் இயந்திரம், இதர பொருட்கள் ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில், அவருக்கு புதிதாக வாங்கி இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் ஆர். நாகேந்திர குமார் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகநாதன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் சதீஷ், அறக்கட்டளை பொருளாளர் வன்மீகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top