பேராவூரணி ஜே.ஸி.கே சி.பி.எஸ்.இ வித்யாலயா பள்ளியில் உணவு திருவிழா

IT TEAM
0

 


பேராவூரணி ஜே.ஸி.கே சி.பி.எஸ்.இ வித்யாலயா பள்ளியில் உணவு திருவிழா நடந்தது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அறங்காவலர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சுபா வரவேற்றார். குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி உணவு திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.


விழாவில், மாணவர்கள் தங்களது வீட்டில் சமைத்த மட்டன், சிக்கன் பிரியாணி, தயிர் சாதம், நூடுல்ஸ், சப்பாத்தி, கேசரி, கூல், பாயாசம், ஸ்வீட், ஜூஸ், பழங்கள் என பல்வேறு வகையான உணவு பொருட்களை சகா மாணவர்களுக்கு வழங்கி சாப்பிட்டனர்.


இதில் அறங்காவலர்கள் கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், நிர்வாக அலுவலர் சுரேஷ், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அஞ்சுகாதேவி நன்றி கூறினார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top