சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்-24 பேராவூரணியில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி!

IT TEAM
0 minute read
0


 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்-24 பேராவூரணியில் போதை பொருள் எதிர்ப்பு பேரணி! -TNTJ அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி வட்டாரம் கிளை நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று 10.08.2024 மாலை பேராவூரணி தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகிக்க மாவட்ட துணைத் தலைவர் அஷ்ரப் அலி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்-24 மாலை பேராவூரணியில் கஞ்சா,மது,புகை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு எதிராக மாபெரும் மக்கள் திரள் பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.மேலும் மாநில தலைமை அறிவித்த அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) பத்து மாத செயல் திட்டத்தை முன்னிட்டு அனைத்து கிளைகளிலும் தெருமுனை பிரச்சாரம் மற்றும் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேராவூரணி,ஆவணம்,சேதுபாவசத்திரம், சம்பைபட்டினம், செந்தலைப்பட்டினம்,முடச்சிக்காடு மற்றும் புதுப்பட்டினம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top