தஞ்சாவூர், ஏப்.16 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நகர் பொன்னாங்கண்ணிக்காடு,புற்றுநோய் தீர்த்த அருள்மிகு பொன்னி விநாயகர், அருள்மிகு பாலமுருகன், அருள்மிகு துர்க்கை அம்மன், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் மற்றும் நாக தேவதைகள் நவக்கிரகங்கள், பரிவார தெய்வங்களுக்கு, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற்றது. இதையொட்டி 14 ஆம் தேதி திங்கள்கிழமை தேவதா அனுஞ்கை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் என முதல் கால யாக வேள்வி நடைபெற்றது செவ்வாய்க்கிழமை வாஸ்து சாந்தி, ஜப பாராயணம், பூர்ணாகுதி தீபாரதனை என இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. இன்று புதன்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி ரக்ஷா பந்தனம், கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணா குதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம், 10:30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பொன்னாங்கண்ணிக்காடு,புற்றுநோய் தீர்த்த அருள்மிகு பொன்னி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
ஏப்ரல் 17, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க