பேராவூரணி பேராவூரணி நகர வர்த்தகர் கழக நிர்வாகிகள் தேர்தல், நகர வர்த்தக கழக கட்டிடத்தில், வருகிற சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என நகர வர்த்தகர் கழக கட்டுப்பாட்டு கமிட்டி அறிவித்திருக்கிறார்கள். மேலும் அவர்களது அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது, "தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாக ஸ்ரீ அபிராமி மளிகை ரா.சுப்ரமணியன் மற்றும் சிவகாமி ஜுவல்லர்ஸ் தி.சாமியப்பன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கான வேட்பாளர்களாக ராமு மலர் வணிகம் ரா.பாரதிதாசன் மற்றும் ஸ்ரீ நீவி பிராய்லர்ஸ் ஜே.மணிகண்டன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். அனைத்து வர்த்தகர்களும் வாக்களித்து, பொறுப்பாளர்கள் தேர்வுக்கு உதவிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என அறிவித்துள்ளனர்.