முதலமைச்சருக்காக பேராவூரணியில் தொடர்ந்துவரும் யாக பூஜைகள்.

Unknown
0






பேராவூரணி அருகேயுள்ள பாலத்தளி ஸ்ரீ துர்கையம்மன் கோவிலில் இன்று 21.11.2016 வெள்ளிக்கிழமை புரட்சி தலைவி அம்மா அவர்கள் பூரண குணமடைய வேண்டி பேராவூரணி ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம் அவர்கள் நடத்திய யாகபூஜையில் , பால் குடம்,ஆயுஷ்ய ஹோமம், அனுஞ்ஞை விக்னேஷ்வரா ஹோமம், 108 கலச அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம்,இராகு கால ஸ்ரீ  துர்க்கா பூஜை, கோபூஜை  மற்றும் அன்னதானம் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. யாகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக செய்தி தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு R.வைத்திலிங்கம் BA., அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன் BSc., அவர்களும்,பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் திரு.மா.கோவிந்தராசு அவர்களும், பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் C.V.சேகர் BA.,BL., அவர்களும், மண்டல பால்வளத் தலைவர் R.காந்தி MA.,BEd.,அவர்களும், சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் குழ. சுந்தர்ராஜன் அவர்களும், மாவட்ட மாணவரணி செயலாளர் R.P.ராஜேந்திரன்BSc., அவர்களும், பேராவூரணி நகர செயலாளர் V.N.பக்கிரிசாமி அவர்களும்,பேராவூரணி நகர MGR மன்ற செயலாளர் R.பாண்டியராஜன் அவர்களும்,தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் G.பிரதீஸ் MBA., அவர்களும் பேராவூரணி நகர துணைச்செயலாளர் அபுபக்கர் அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என அனைவரும் கட்சி சார்பற்றும்,மதச்சார்பற்றும் ஒன்றிணைந்து கலந்து கொண்டு புரட்சி தலைவி அம்மா அவர்கள் நலமடைய மனதார பிரார்த்தனை செய்தனர். பூஜைகள், அபிஷேகங்கள் நிறைவடைந்ததும் அன்னதானத்தில் அனைவரும் கலந்து கொண்டு உணவருந்தினா்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top