பேராவூரணி அரசுக்கல்லூரியில் கலந்தாய்வு மே 31.

Unknown
0
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் கலந்தாய்வு மே- 31, ஜூன்-1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் சி.இராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

31-ம் தேதியன்று பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்), பி.காம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 1-ம் தேதி பி,எஸ்.சி (கணிதம்), பி,எஸ்.சி (கணினி அறிவியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

அரசு விதிமுறைகளின்படி, மதிப்பெண் தர வரிசைப்ப ட்டியல் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மாணவர் விண்ணப்ப தரவரிசைப் பட்டியல் 30-ம் தேதி அன்று கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:தீக்கதிர்
Tags

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top