தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல்

IT TEAM
0


 தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் தமிழக நிதியமைச்சர்.


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது,அடுத்த ஆண்டு வரவுள்ள முழுமையான நிதிநிலை அறிக்கைக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த திருந்திய வரவு செலவு பட்ஜெட் அமையும்


’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 2,29,216 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது


நிதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை முனைப்புடன் கையாள வழக்கு மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும் .இதை கண்காணிக்க  ஒய்வு பெற்ற நீதிபதி மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்கப்படும்.


பெட்ரோல்,டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது


2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழ்நாடு அரசின் நிலங்கள் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளன


கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டுள்ளது என்பதை வெள்ளை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது 


ஒன்றிய அரசிடம் இருந்து GST நிலுவைத்தொகையை பெற நிபுணர் குழு அமைக்கப்படும்


 20-21ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் 63% அதிகரித்துள்ளது. மாநிலங்களின் பங்கு கடுமையாகச் சரிந்துள்ளது. ஆகவே எரிபொருள் மீதான விலையைக் குறைக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே இருக்கிறது.


1921ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் குறித்த அனைத்து ஆவணங்களும் கணினி மயமாக்கப்படும் .


தமிழ்நாட்டில் அரசு நிலங்கள் மேலாண்மைக்கு பொது அமைப்பு .


தொழில் நுட்ப புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்படும் 


அரசின் உட்தணிக்கை முறையில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்


தலைமைச்செயலகம் முதல் அனைத்து துறை அலுவலகங்கள் வரை தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும் 


 “தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடி ஒதுக்கீடு; தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது”


சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807 கோடி ஒதுக்கீடு


செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்


முக்கியமான தமிழ் படைப்புகள் பிறமொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்படும்


கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படும்.


கொற்கை மற்றும் அழகன்குளம் பகுதியில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் 


காவல்துறைக்கு ரூ 8930 கோடி ஒதுக்கீடு 


காவல் துறையில் 16 ஆயிரம் காலி இடங்கள் நிரப்படும். 


  “பேரிடர் மேலாண்மையில் எந்த சூழலையும் சந்திக்க தமிழ்நாடு தயாராக உள்ளது; பேரிடர் மேலாண்மைக்காக  கூடுதல் தொகை வழங்க  ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்”


தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு 


தீயணைப்பு சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும். 


சாலை பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு


செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3ம் தேதி 10 லட்சம் ரூபாயுடன் வழங்கப்படும்.


விபத்துகளின் எண்ணிக்கை குறைக்க ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் 


போக்குவரத்து ஆணையரகம் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரமாக பெயர் மாற்றம் 


பேரிடர் மேலாண்மைக்காக 15வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.1360 கோடி போதுமானதாக இல்லை


போக்குவரத்து ஆணையரகம் , போக்குவரத்து சாலை பாதுகாப்பு ஆணையரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும்


அனைத்து நீதிமன்றங்களுக்கும் சொந்த கட்டிடம்


நீதித்துறை - 1713 கோடி ஒதுக்கீடு


அடுத்த 10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகளும் கதவணைகளும் கட்டப்படும்


ரூ. 111 கோடி செலவில் 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்


தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்

மீன்வளத்துறைக்கு ரூ. 303 கோடி ஒதுக்கீடு


காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்


தமிழக பசுமை இயக்கம் ஏற்ப்படுத்தபட்டு .மன்சார் மரங்கள் நடப்படும் 


6 இடங்களில் மீன்பிடி துறைமுகம் அமைக்க  6.25 கோடி செலவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்


பசுமை பரப்பளவை அதிகரிக்க தமிழ்நாடு பசுமை இயக்கம் 


மன் சார்ந்த மரங்களை அடுத்த 10 ஆண்டுகள் பெரிய மரம் நடும் திட்டம் 


500 கோடி ரூபாய் செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும் 


இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுசூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும் 


இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் ,தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நிறுவப்படும்.


நூறு நாள் வேலைத் திட்ட ஊதியத்தை ரூ.300 ஆக உயர்த்த மத்திய அரசை வலியுறுத்தப்படும் 


மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் பற்றி அறிக்கை தயார் செய்யப்படும் 


ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க 623.59 கோடி ரூபாய் ஒதுக்கீடு 


நகர்புற ஊதிய வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு


திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் அமைக்கப்படும்


தமிழ்நாடு மின்மிலை மாநிலம் அல்ல. தமிழ்நாடு மிண்மிகை மாநிலம் என கூறி வந்தது தவறானது 


2500 மெகாவாட் மின்சாரம் சந்தையில் வாங்கப்படுகிறது 


ரூ.19872 கோடி மின்சாரத்துறைக்கு ஒதுக்கீடு 

·

ரூ. 32599 கோடி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு 


கோடம்பாக்கம் - பூந்தமல்லி மெட்ரோ சேவை 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் 


ரூ.623 கோடியில் 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் 


ரூ. 3954 கோடி குடிசை மாற்று வாரியத்திற்கு ஒதுக்கீடு


சென்னை சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் 


கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்


சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதை, கொன்னூர் நெடுஞ்சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் 335 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்படும் 


கொதஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகால் அமைக்க 80 கோடி ஒதுக்கீடு 


சீர்மிகு நகர திட்டத்திற்கு 2350 கோடியும்  அம்ருத் திட்டத்திற்கு 1450  கோடி  ஒதுக்கீடு


திருச்சியில் ஒருங்கிணைந்த  புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும் 


27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்படும் 


சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20000 கோடி கடன் வழங்கப்படும் 


நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்வு 


ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ஆக உயர்வு 


ரூ.2000 கோடியில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும்


8 லட்சம் குடும்பங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீடு வழங்குவது உறுதி 


இந்த ஆண்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்


அடிப்படைக் கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய எண்ணும் எழுத்தும் இயக்கம் ரூபாய் 66.70 கோடி செலவில் தீவிரமாக செய்லபடுத்தப்படும்


ரூ. 5369 கோடி உயர்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு


சுற்றுலாத்துறைக்கு 187 கோடி ரூபாய் ஒதுக்கீடு 


ரூ.18933 கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு 


முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் இந்தாண்டு 1046 கோடி ரூபாயில் நடைமுறைப்படுத்தப்படும் 

முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் இந்தாண்டு 1046 கோடி ரூபாயில் நடைமுறைப்படுத்தப்படும் 


29 துறைகளின் 600 சேவைகள் இ-சேவையில் வழங்கப்படும்


300 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்; சுற்றுலாதுறைக்கு ரூ187 கோடி நிதி ஒதுக்கீடு


திருமண நிதி உதவி திட்டத்துக்கு ரூ762 கோடி நிதி ஒதுக்கீடு


3-ம் பாலித்தனவர் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ1.5 கோடி ஒதுக்கீடு


புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்துக்கு ரூ1725 கோடி ஒதுக்கீடு


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ2356 கோடி நிதி ஒதுக்கீடு


புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,725 கோடி ஒதுக்கீடு” 


பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.


மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்.


திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ஓய்வூதிய திட்டத்திற்காக ₹1.50 கோடி ஒதுக்கீடு


மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிப்பதற்காக தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.


 -  நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top