![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiaEXCrH0AZC8znBl4dMHa3DcVW64QMBBssvr5lNUU6VLkDnwXKjE_-kBqj6S5XioLz6xcmnAcIpA2WFKOdxyr2juQnszy3WbF4UJKLxESkT_8pdu9526YvBst1AHp4H4Z50pFcjzeaWxI/s1600-rw/new-jpg-accident-1.jpg)
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை அவர், கொன்றைக்காடு கடைவீதிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அவருடைய கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நீலகண்டனை, பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நீலகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்