![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjndBZse0PHHdjAMM-Tmf3veajmRtrMmiG5tHvM0v-WbpDAoRUzzsca0j7N8Zwvi0M1D0cSI5YrMHK9JyubjSBx1YGTBb7L9Ibz7G3x89y7LDKIi5Jd3wArdyFQjLQuHHpnQlakkEqoVAA/s1600-rw/PVITOWN_MIDSCHOOL_1115_01.jpg)
பேராவூரணி அடுத்த பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிய குழந்தைகள் தின விழா போட்டிகள் செவ்வாயன்று நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியை வீரம்மாள் துவக்கி வைத்தார். ஆசிரியைகள் ஜெயந்தி, ரஞ்சிதா, குளோரி ஆகியோர் நடுவர்களாக இருந்து விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.