இதுபற்றி அவரிடம் திருவள்ளுவர் தினத்தன்று ஆண்டுகள் தோறும் ஒரு ரூபாய்க்கு தேனீர் கொடுக்கின்றீர்களே உங்களுக்கு நஷ்டம் ஏற்படாதா? என்று நமது நிருபர் கேட்டபோது திருக்குறளுக்காக வருடத்தில் ஒரு நாள் ஒரு ரூபாய்க்கு தேனீர் கொடுக்கிறேன். அதனால் எனக்கு 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை செலவாகும் இருந்தாலும் அன்றைய தினம் பொங்கல் என்பதால் எந்த தேனீர் கடையும் திறக்கபடாத நேரத்தில் நான் மட்டும் கடை திறந்து அனைவருக்கும் தேனீர் கொடுப்பது நினைத்து மனமகிழ்வு அடைகிறேன்.
என்னுடைய நோக்கம் என்னவென்றால் திருக்குறளால் உலகத்துத் தீமைகள் எல்லாம் நீக்கப்பட வேண்டும், தேவையான நல வாழ்வை திருக்குறளால் ஆக்கப்பட வேண்டும் ,
தேசமெங்கும் திருக்குறளே பொதுமறையாய் திகழ வேண்டும்.
உலகம் முழுவதும் திருக்குறள் நெறியை உணர்த்தியே ஆகவேண்டும்.
உலகத்தை அழித்திடும் ஆயுதவெறியை ஒழித்தே தீர வேண்டும்.
சாதி மதமெனும் சங்கடம் நீக்கியோர் சரித்திரம் படைக்க வேண்டும்.
சரி சமமாக எல்லோரும் வாழ்ந்திடக் சங்கர்ப்பம் ஏற்க வேண்டும்.
போதையில் விழுந்து பாதையை மறக்கும் போக்கினை உடனே மாற்ற வேண்டும்.
பாதையை உணர்ந்து பயணத்தை தொடர்ந்திட திருக்குறள் படித்தே ஆக வேண்டும்.
தினம் தினம் திருக்குறள் படித்து அதன் வழி நடந்து புதுமையான ஓர் உலகம் நாளை படைக்க வேண்டும் என்றார்.
திருக்குறள் சம்பந்தமான எந்த ஒரு தகவல் குறித்து
தெரிந்து கொள்ள இரவு 12 மணி என்றாலும் நான் தயார் என சொல்லும் தங்கவேலனாருக்கு சுவாசமே திருக்குறள் என்றால் மிகையில்லை. இந்த வயதிலும் இளைஞரைப் போல செயல்படும் தங்கவேலனார் பேராவூரணி திருக்குறள் பேரவை தலைவராக செயலாற்றி வருகிறார்.
