கோவிலின் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக புதிதாக எமதர்மராஜன் சிலை மகாபலிபுரத்தில் வடிவமைக்கப்பட்டு, கோவில் வாளகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பழைய சிலையும் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு, தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகம்
வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கோவிலில் தற்போது திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக 19-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. 21-ந் தேதி திருச்சிற்றம்பலம் பாரதி நகரில் இருந்து யானை, குதிரைகளுடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினரும், திருச்சிற்றம்பலம் கிராம மக்களும் செய்து வருகின்றனர்.
