பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் அன்னதான நிகழ்வு

IT TEAM
0

 


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி அலுவலக வளாகத்தில், லயன்ஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் மெல்வின் ஜோன்ஸின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில்,  பேராவூரணி பேரூராட்சியின் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க தலைவர் ஏஎஸ்ஏ.தெட்சிணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்விற்கு, பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். பேரூராட்சி நிர்வாக அலுவலர் பழனிவேல், லயன்ஸ் சங்க மாவட்டத்  தலைவர் இளங்கோ, மண்டல ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், சாசன தலைவர் நீலகண்டன் மற்றும் மைதீன் பிச்சை  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், பாலு (எ) பாலசுப்பிரமணியன், டிவி குமார், சபரி முத்துக்குமார், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு ஏற்பாடுகளை,  தலைவர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி, செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாக அலுவலர் குமரன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வுக்கான அனைத்து செலவுகளையும் லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் இளங்கோ, பன்னீர்செல்வம், பழனிவேல் மற்றும் சந்தோஷ் ஆகியோர் ஏற்றிருந்தனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top