பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

IT TEAM
0

 


பேராவூரணி, ஜன 14

பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.



தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில், மாணவிகள் பொங்கல் வைத்து, சூரிய கடவுளை வணங்கி, ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கங்கப்பட்டது. மேலும் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் நினைவு பரிசுகளை வழங்கினர். விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


இதில் பள்ளி முதல்வர் சர்மிளா, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், ஆசிரியர்கள் சுரேஷ், மூர்த்தி, பெரியநாயகி, ரமாதேவி, ஆஞ்சுகாதேவி, பிரதீஷா, பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top