பேராவூரணி குமரப்பா பள்ளி பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி.

IT TEAM
0


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது அதில் பேராவூரணி டாக்டர். ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 131 பேர் தேர்வெழுதினர். இதில் 131 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 100 ஆகும். 600 மதிப்பெண்களுக்கு 571 மதிப்பெண் பெற்ற மாணவன் சுகேஷ் முதலிடமும், 570 மதிப்பெண் பெற்ற மாணவி ஷோபிகா இரண்டாமிடமும், 553 மதிப்பெண் பெற்ற மாணவி ஸ்ரீமதி மூன்றாமிடமும் பெற்றனர்.


சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை செயலாளர் நபிஷாபேகம், பொருளாளர் அஸ்வின்கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவர்களையும் அதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top