பேராவூரணியில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி.

IT TEAM
0

 


பேராவூரணி, தனம் மஹாலில் நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை, அக்னி சாய் எண்டர்பிரைசஸ் மற்றும் நேசன் நேச்சுரல்ஸ் இணைந்து நடத்திய பத்தாம், 12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்தார். வெங்கடேஸ்வரா கல்வி குழும தலைவர் மு.கி.லெனின், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் க.அன்பழகன், திமுக தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீத், வேதவிருட்சம் கல்வி நிறுவன தலைவர், கல்வியாளர் கலைமணி கருணாநிதி, நகர வர்த்தக கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், லையன்ஸ் சங்க பொறுப்பாளர் நீலகண்டன், ஐயப்ப சேவா சங்க மாநில இணை செயலாளர் கேவிஆர்.நீலகண்டன், வர்த்தக கழக பொருளாளர் சாதிக் அலி, காங்கிரஸ் சேக் இப்ராம்சா, செய்தியாளர்கள் ராஜா, முனைவர் வேத.கரம்சந்த் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி வரவேற்புரை ஆற்ற, அக்னி சாய் எண்டர்பிரைசஸ் மற்றும் நேசன் நேச்சுரல்ஸ் நிர்வாகிகள் நன்றி கூறினர். நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top