பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய கருத்தரங்கு

IT TEAM
0

 



பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. கணினி அறிவியல் துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு-கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர்(பொ) பேராசிரியர் முனைவர் சி.இராணி முன்னிலை வகித்தார்.

செயற்கை நுண்ணறிவு-கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி பேசினார். கருத்தரங்கில், செயற்கை நுண்ணறிவு உருவான வரலாறு தொடங்கி, இன்றைய கணினி உலகில் கொடி கட்டி பறக்கும் ஜெமினி சார்ஜிபிடி போன்றவை குறித்து விளக்கி பேசினார்.

இதில், கணினி அறிவியல் துறை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் முனைவர் சோ.ஜமுனா வரவேற்றார். பேராசிரியர் அ.ராஜேஷ் நன்றி கூறினார்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top