பேராவூரணி குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் ஜே.ஸி.குமரப்பாவின் 134வது பிறந்தநாள் விழா நடந்தது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து, ஜே.ஸி. குமரப்பாவின் 134 வது பிறந்த நாளில் அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி, ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பொருளாளர் அஸ்வின்கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், குமரப்பா அறக்கட்டளை செயலாளர் நபிஷாபேகம், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
