சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா

IT TEAM
0

 



தஞ்சாவூர், நவ.12 - 

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு, பூக்கொல்லையில் புதிதாக ரூ.3 கோடியே 73 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 


அதனைத் தொடர்ந்து, புதிய கட்டடத்தில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், மாவட்ட ஊராட்சி முகமை, திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 


அதனைத் தொடர்ந்து, ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கத்தை புதிய அலுவலகத்தில் உள்ள அவரது அறையில் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவலர்கள் அமரவைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 


இதில், வட்டாட்சியர் இரா.தெய்வானை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், 

திமுக ஒன்றியச் செயலாளர்கள் க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், தனபால், 

மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பூவாணம் தேவதாஸ் உள்ளிட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள், அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top