பேராவூரணி மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "வருகிற சனிக்கிழமை 07.12.2024 பேராவூரணி 110/33-11 கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான பேராவூரணி நகர், பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால் சித்தாத்திக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிகாடு, கட்டயங்காடு, மதன்பட்டஊர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, ஆனைக்காடு, சொர்ணக்காடு கடை தெரு, பட்டத்துரணி, படப்பனார்வயல், ஆண்டாக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செல்லும் மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால், மின்தடை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என அறிவித்துள்ளார்.