பேராவூரணி, பிப் 22
பேராவூரணி குமரப்பா பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க மாநில பொருளாளர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். சி.பி.எஸ்.இ பள்ளி ஆசிரியர் அனுஷியாகுருஸ் வரவேற்றார்.
ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குனர் ரவிசந்தர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு 25, 50, 100, 200, 400, 800 மீட்டர் தூரம் உள்ள ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல் என பல போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், நபிஷாபேகம், பள்ளி முதல்வர் சர்மிளா, நிர்வாக அலுவலர் சுரேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் முரளிதரன், ரமேஷ், தீபிகா, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.