வனத்துறை சார்பில் 1000 சதுர மீட்டரில், கடலுக்குள் கடல்தாழை நடவு செய்யும் பணி

IT TEAM
0



தஞ்சாவூர், ஏப்.21 - 

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 


இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை பாதுகாக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் (TBGPCCR Project) தஞ்சாவூர் மாவட்ட    வனத்துறையுடன் இணைந்து ஓம்கார் பௌண்டேஷன் நிறுவனத்தின்  மூலம் 1000 சதுர மீட்டர் பரப்பளவில்  கடல் தாழைகள் வளர்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடல்பகுதி 11 மீட்டர் ஆழம் வரை உள்ளது. இந்த பகுதியில் தான், அரிய வகை கடல்வாழ் உயிரினமான கடல்பசுக்கள் காணப்படுகின்றன. இவைகள் ஒரு நாளைக்கு 40 முதல் 45 கிலோ வரை கடல் தாழைகளை உணவாக உட்கொள்கின்றன. 


எனவே, கடல் தாழைகளை வளர்க்கும் நோக்கத்தில், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வல்லவன்பட்டினம் கிராம கடல் பகுதியில் ட்ரோன்  மூலம் ஆராய்ந்து,  அதில் 10 இடங்களை தேர்வு செய்து கடல் தாழைகள் வளர்க்கப்படுகின்றன.


இதில், மீனவர்கள் மூலம் வேலி அமைக்கப்பட்டு, எளிதில்  மக்கக்கூடிய சணல் மற்றும் தென்னங்கயிறுகள்  ஒரு சதுர மீட்டர் அளவுள்ள மூங்கில் சட்டங்களில் பின்னப்படுகின்றன.  அவற்றில் கரும்புத்தாழை (Cymodocea serrulatta), அருகுத்தாழை (Halodule pinifolia), ஊசித்தாழை (Syringodium Isoetifolium) ஆகிய கடல் தாழைகளின் தரையடித்தண்டுகள் சதுர மீட்டருக்கு  52 வீதம்  கட்டப்பட்டு,  பின்னர் கடலிற்கு அடியில் (நடவு) மீனவர்கள் நவீன பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து சென்று, நடவு செய்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top