பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு, அகாடமி செயலாளர் ஆசிரியர் காஜா முகைதீன் தலைமை வகித்தார். அகாடமி தலைவர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி வரவேற்றார். யோகா பயிற்சியாளர் ஜெயபிரகாஷ், கராத்தே மற்றும் சிலம்ப பயிற்சியாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர். சர்வதேச யோகா தின அனுசரிப்பின் நோக்கங்கள் குறித்து அகாடமி நிறுவனர் ஆசிரியர் மருத உதயகுமார் விளக்கி பேசினார். நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக, மருத்துவர் துரை.நீலகண்டன், மருத்துவர் சினேகா பிரியதர்ஷினி, கல்வியாளர் கௌதமன், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மனோகரன், ஆசிரியர் செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டு யோகா குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்டு யோகாசனம் செய்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வில், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக, அகாடமியின் பெற்றோர் சங்க தலைவர் நித்யா அனைவருக்கும் நன்றி கூறினார்.