மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சேதுபாவா த்திரம் வட்டார மருத்துவ அலுவலர் எம்.ராமலிங்கம் தலைமையில் பட்டுக்கோட்டை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் சீனிவாசன் அவர்களின் முன்னிலையில், தமிழக வெற்றி கழகம் மாவட்டச் கழக செயலாளர் சி. மதன் முன்னிலையில் சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் ரா. அருள் முருகன் அவர்களின் ஏற்பாட்டில், குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது. தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பட்டுக்கோட்டை, பேராவூரணி சேதுபாவாசத்திரம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை ரத்த வங்கி குழுவினர் கலந்து கொண்டனர். மருத்துவர் பூங்குழலன் தலைமையில், மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 20 நபர்களுக்கு ரத்தம் தானமாக பெறப்பட்டது.