பேராவூரணி வட்டார வள மையத்தில் செயல்படும் இல்லம் தேடி கல்வித் திட்ட தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கலாராணி தலைமை வகித்தார். வட்டார வளமை மேற்பார்வையாளர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வட்டார வள மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தொடக்க நிலை மாணவர்களிடம் தன்னார்வலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு எப்படி பாடம் நடத்த வேண்டும் என்று பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது. பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு புத்தகம் மற்றும் போஸ்டர் வழங்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு கருத்தாளராக வட்டார வள ஆசிரியர் பயிற்றுநர் சாஷிதாபானு செயல்ப்பட்டார்.
பேராவூரணி வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ஜூன் 21, 2025
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க