பேராவூரணி பகுதிகளில் செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை மின்தடை

IT TEAM
0



பேராவூரணி பகுதிகளில் வரும் செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்  செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான பேராவூரணி நகர், பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வாட்டாத்திக்கொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது, மேலும் பொதுமக்கள் மின்தடை புகார்களுக்கு மின்னகம் எண். 9498794987 என்ற எண்ணை அழைத்து புகார்கள் மற்றும் மின் விபரங்கள் அறிந்து கொள்ளலாம் என உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top