பேராவூரணி, ஜன 14,
பேராவூரணி குமரப்பா பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கப் பொருளாளர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்து, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, பொருளாளர் அஸ்வின்கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், குமரப்பா அறக்கட்டளை செயலாளர் நபிசாபேகம், முதல்வர்கள் சுரேஷ், சர்மிளா, ஆசிரியர்கள் பெரியநாயகி, மூர்த்தி, ரமாதேவி, லேகா, அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
