நீர்நிலை பாதுகாப்புக்கான மேலாண்மையில் சிறந்த பணிகளை ஆற்றி வரும் மெகா பவுண்டேஷன் அமைப்பின் அலுவலக திறப்பு விழா பேராவூரணியில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி வேல்முருகன் குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். விழாவில், ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முதல்வன், வர்த்தக சங்கத் தலைவர் அபிராமி சுப்பிரமணியன், மெய்ச்சுடர் வெங்கடேசன், ரோட்டரி சங்க தலைவர் சிவ.சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மெகா பவுண்டேஷன் நிறுவனர் நிமல் ராகவன் வரவேற்றார். தலைமையாசிரியர் கணேசன் நன்றி கூறினார்.
